Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மிருகங்கள் என்று,உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளது.

குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் மிகவும் கொந்தளித்துப்போன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குபவர்கள் மிருகங்கள் என்று மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். மேலும், இத்தகைய குற்றம் புரிந்தவர்களுக்கு மாநில நீதிமன்றங்கள் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கத் தவறக் கூடது என்றும் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லியில் சமீபத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகளை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை நீதிபதிகள் வேதனையுடன் நினைவுக் கூர்ந்து உள்ளனர்.நேற்று சென்னை நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களின் ஆண்மையை அறுவை சிகிச்சையின் மூலம் துண்டிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மிருகங்கள்: உச்ச நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com