Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி, நிறைந்த கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் கொண்டவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழினி என்று அறியப்பட்ட திருமதி சிவகாமி ஜெயக்குமாரின் மறைவுக்கு கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டில் நேரடியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று அஞ்சலி செலுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு மருத்துவமனையில் சகோதரி சிவகாமியின் உயிர்பிரிந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் துக்கம் தாளாமல் கண்கள் கலங்கிவிட்டன. சிவகாமி, தமிழினி எனும் இயக்கப் பெயருடன் விடுதலைப் புலிகள் மகளீர் அணியில் அரசியல்துறையில் தன்னை அர்ப்பணித்திருந்தமையை அறிந்திருந்தேன்.

நல்ல அரசியல் அறிவும் ஆற்றலும் நிறைந்தவராய் விளங்கினார். தலைமைத்துவமும் ஆளுமையும் கொண்டிருந்தார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்டபார்வையும் இனிமையுடன் பழகும் சுபாவமும் பண்பும் நிறைந்த பெண்மணியாக ஒரு தலைமைத்துவமிக்க போராளியாக விளங்கியதை அறிவேன்.

தமிழினியை கிளிநொச்சி, வன்னி, அம்பாறை முதலான இயக்க அலுவலகங்களில் சந்தித்து அரசியல் சார்ந்த விடயங்களைப் பற்றி ஆர்வமுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களை நான் நினைவு கூருகின்றேன். நிறைந்த கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் அவர் மூச்சாகவும் இருந்ததையும் அறிந்திருக்கிறேன். தமிழின விடுதலைக்காகத் தமிழீழ தேசத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையிலும் போர்ப் படையிலும் மேலும் பலதுறைகளில் பெண்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்றியிருந்தமையும் கொள்கைக்காகத் தம் உயிரை அர்ப்பணித்தமையும் விடுதலை வரலாற்றில் பெருமையுன் பதிவுசெய்யமுடியும்.

இன விடுதலைப் போரின் பங்காளியாக 2009 வரை வன்னியில் அர்ப்பணித்து நின்ற வரை இராணுவம் கைது செய்து சிறை முகாமிலும் புனர்வாழ்வு முகாமுக்குள்ளும் அடைத்தது. அங்கிருந்து நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் தன் தாயுடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் மாறாத நோயினால் மருத்துவமனையில் நேற்று இவர் உயிர் பிரிந்து விட்டாலும் என்றும் தமிழர் நினைவிலிருப்பார். எம் இதய அஞ்சலியை அர்ப்பணித்து அன்னார் குடும்பத்தினர் துயரத்தில், கண்ணீரில் கலந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘தமிழினி’ கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் கொண்டவர்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com