Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கிளை அலுவலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

“அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சிறைக்குள் நடாத்தும் உண்ணாவிதரப் போராட்டம் நியாயமானதே- அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா, சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா, சர்வதேசமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” போன்ற கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பினர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com