பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மோல்டாவின் பிர்குவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும், தமது வேலைத்திட்டங்களில் இணைத்துக் கொண்டு செயற்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வந்த இலங்கை, நேற்று அதனை மோல்டாவிடம் கையளித்தது.
மோல்டாவின் பிர்குவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும், தமது வேலைத்திட்டங்களில் இணைத்துக் கொண்டு செயற்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வந்த இலங்கை, நேற்று அதனை மோல்டாவிடம் கையளித்தது.




0 Responses to பொதுநலவாயத்தின் வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிக்கின்றது: ஜனாதிபதி