Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ, நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் பதற்றமான சூழ்நிலை காணப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மாவீரர் தினம் அமைதியாக அனுஷ்டிப்பு; யாரும் கைது செய்யப்படவில்லை: பொலிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com