Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆசிய நாடுகளின் புவி மாற்றம் தரும் இயற்கை பேரிடரால் குழந்தைகள் நோய்க்கு ஆளாகும் அபாயம் அதிக அளவில் உள்ளது என்று ஐநாவுடன் தொடர்புடைய யுனிசெஃப் எச்சரித்து உள்ளது.

யுனிசெஃப் ஆய்வில் ஆசியன் நாடுகளில் புவி மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் அதிக அளவில் குழந்தைகள் அதிகமான நோய்க்கும், உயிரிழப்புக்கும் ஆளாகும் அபாயச் சூழல் உருவாகி உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கையை அழித்து மனிதர்கள் செய்யும் தவறுகளால் அவர்களின் சந்ததிகள் இப்படி நோய்க்கு ஆளாகும் அவல நிலை ஏற்படுகிறது என்றும் யுனிசெஃப் கருத்துத் தெரிவித்துள்ளது. இன்னும் அப்பட்டமாக சொல்லப்போனால் பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகள் தலையில் விடிகிறது என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

0 Responses to புவி மாற்றம் இயற்கை பேரிடரால் குழந்தைகள் நோய்க்கு ஆளாகும் அபாயம்: யுனிசெஃப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com