தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தினத்தை நினைவுகூர்ந்து கிழக்கில் துண்டுப்பிரசுரமொன்று வெளியாகியுள்ளது.
மாவீரர் நாள் கார்த்திகை – 27 என தலைப்பிடப்பட்டு வெளியாகியுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்திற்கு மட்டக்களப்பு தமிழ் சமூகம் என உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
‘மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள். மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள். எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள். கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள்.
கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள். காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள். ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள். நேருக்குப் போர் செய்து நிலம் காத்த உத்தமர்கள்.
தேசத்தின் விடுதலைக்காய் தேகத்தை அர்ப்பணித்தோர் தாகமே தமிழ் என்று தமது மூச்சில் உச்சரித்தோர், இலட்சியக் கனவுகளை ஏந்தி நிற்கும் தீப்பொறிகள், இடி மின்னல் அடித்தாலும் இலக்குமாறா எறிகணைகள்.
இனம் காக்க வீழ்ந்திட்ட இலட்சிய வீரர்களை மறக்கலாமா தமிழினமே? மாவீரர் நினைவுகளை மனதார தீபமேற்றி மரியாதை செய்திடுவோம். மாவீரர் நாளதனை மறக்காமல் போற்றிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் கார்த்திகை – 27 என தலைப்பிடப்பட்டு வெளியாகியுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்திற்கு மட்டக்களப்பு தமிழ் சமூகம் என உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
‘மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள். மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள். எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள். கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள்.
கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள். காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள். ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள். நேருக்குப் போர் செய்து நிலம் காத்த உத்தமர்கள்.
தேசத்தின் விடுதலைக்காய் தேகத்தை அர்ப்பணித்தோர் தாகமே தமிழ் என்று தமது மூச்சில் உச்சரித்தோர், இலட்சியக் கனவுகளை ஏந்தி நிற்கும் தீப்பொறிகள், இடி மின்னல் அடித்தாலும் இலக்குமாறா எறிகணைகள்.
இனம் காக்க வீழ்ந்திட்ட இலட்சிய வீரர்களை மறக்கலாமா தமிழினமே? மாவீரர் நினைவுகளை மனதார தீபமேற்றி மரியாதை செய்திடுவோம். மாவீரர் நாளதனை மறக்காமல் போற்றிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 Responses to கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள், கிழக்கில் துண்டுப்பிரசுரம்