Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஏற்பாடு செய்துள்ள கூட்டம் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணியின் போராட்டத்தில் பங்கு கொள்வதற்கு, தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட தயாராக இருந்தார்கள். ஆனாலும், அவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் சிறையில் அடைப்பார்கள் என்பதால், அவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தான் வலியுறுத்தியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com