Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயினும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.

மக்கள் சனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com