போதைப்பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும், பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை, யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரிடம் தான் நேரடியாக முன்வைத்ததாவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
“குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது” என்றும் தான் எடுத்துக் கூறியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை, யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரிடம் தான் நேரடியாக முன்வைத்ததாவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
“குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது” என்றும் தான் எடுத்துக் கூறியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு; சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!