Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் திகதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் திகதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் திகதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக உள்ளாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் டிச.,13ஆம் திகதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் கமிஷனர் பழனிசாமி தேர்தல் திகதியை வெளியிட்டார்.

தேர்தல் நாளன்று காலை 07.00 மணிக்கு துவங்கி மாலை 05.00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை விபரம் :

வேட்புமனு தாக்கல் : டிச.,6
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : டிச.,13
மனுக்கள் பரிசீலனை : டிச.,16
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : டிச.,18
முதல் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,27
2 ஆம் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,30
ஓட்டு எண்ணிக்கை : ஜன., 2
தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் : ஜன.,4
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு : ஜன.,6
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் : ஜன.,11

0 Responses to டிசம்பர் 27, 30ஆம் திகதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com