Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல் படி உலகம் முழுதும் சுமார் 210 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா பெரும் தொற்று நோய்த் தாக்கம் தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே:

உலகளாவிய ரீதியில்,

மொத்தத் தொற்றுக்கள்: 2 279 244
மொத்த இறப்புக்கள்: 156 276
குணமடைந்தவர்கள்: 582 903
ஆக்டிவ் தொற்றுக்கள்: 1 540 065
மோசமான நிலையில் உள்ளவர்கள்: 57 522

நாடளாவிய புள்ளி விபரம்:

அமெரிக்கா: மொத்தத் தொற்றுக்கள் : 712 399 : மொத்த இறப்புக்கள் : 37 268
ஸ்பெயின்: 191 726 : 20 043
இத்தாலி: 172 434 : 22 745
பிரான்ஸ்: 147 969 : 18 681
ஜேர்மனி: 142 325 : 4403
பிரிட்டன்: 114 217 : 15 464
சீனா: 82 719 : 4632
ஈரான் : 80 868 : 5031
துருக்கி : 78 546 : 1769
பெல்ஜியம் : 37 183 : 5453
ரஷ்யா : 36 793 : 313
பிரேசில் : 34 485 : 2181
கனடா : 32 412 : 1346
நெதர்லாந்து : 31 589 : 3601
சுவிட்சர்லாந்து : 27 404 : 1344
போர்த்துக்கல் : 19 685 : 687
இந்தியா : 14 792 : 488
தென்கொரியா : 10 653 : 232
ஜப்பான் : 9787 : 190
இலங்கை : 248 : 7

இன்றைய புள்ளிவிபரத்தில் அமெரிக்காவில் மொத்தத் தொற்றுக்கள் 7 இலட்சத்தைக் கடந்துள்ளது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 40 000 ஐ நெருங்கி வருகின்றது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகத் தினசரி பலி எண்ணிக்கை 2000 ஐ விட அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் மொத்தத் தொற்றுக்கள் 15 000 ஐ நெருங்கியும் பலி எண்ணிக்கை 500 நோக்கியும் விரைந்து வருகின்றது.

இதேவேளை கொரோனா தொற்றுதலைத் தடுக்க ஆப்பிரிக்கக் கண்டம் துரித நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் கொரோனாவின் அடுத்த மையமாக அப்பிராந்தியம் மாறி சுமார் 120 கோடிப் பேருக்கு இது தொற்றும் ஆபத்து உள்ளதாக ஐ.நா இன் ஆப்பிரிக்கப் பொருளாதார ஆணையம் எச்சரித்துள்ளது. பெப்ரவரி 14 இல் முதல் தொற்று இனம் காணப் பட்ட ஆப்பிரிக்காவில் தற்போது மொத்தத் தொற்றுக்கள் 18 000 ஐத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அல்ஜீரியா 348 உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.

அல்ஜீரியாவை அடுத்து எகிப்து, மொரோக்கோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அபாயத்தில் உள்ளன. இதேவேளை நிலமை கட்டுக்கடங்காது போனால் ஆப்பிரிக்காவில் 3 இலட்சம் முதல் 33 இலட்சம் வரையிலான உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என ஐ.நாவின் யுனெகா தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்கா தீவிர சமூக விலகல் நடவடிக்கைகளைப் பின்பற்றினால் எதிர்பார்க்கப் படும் 120 கோடித் தொற்றுக்கள் 12.2 கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது என்றும் யுனெகா கணித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் இருந்து தான் இந்தக் கொரோனா வைரஸ் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

0 Responses to இன்றைய கொரோனா!: கொரோனாவின் அடுத்த மையமாக ஆப்பிரிக்கா, ஐ.நா எச்சரிக்கை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com