முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை நேற்று சிறப்பாக நடந்தது.
அதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முத்துராமலிங்கத் தேவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தில் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு கொதித்து, ஒரு தனிப்படையை அனுப்பி தமிழர்களைக் காத்திருப்பார்.
தேவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை ஒன்றை அனுப்பியிருப்பார்: அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ
பதிந்தவர்:
தம்பியன்
31 October 2009



0 Responses to தேவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை ஒன்றை அனுப்பியிருப்பார்: அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ