Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா காவற்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்பந்தாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு வழங்கவிருந்த கிண்ணத்தில விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவரது படங்கள் இணைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததையடுத்து, குறித்த கிண்ணத்தைப் பறிமுதல் செய்த காவற்துறையினர் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் காவற்துறை அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட முழுங்காவில் - இரணைவானர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைத்தானத்தில் நான்கு நாட்கள் இந்தக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றதுடன், இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு வழங்கவிருந்த கிண்ணத்தில் விடுதலைப்புலிகளின் மாலதி படையணி மாவீரர்களான பொழினி மற்றும் தண்மதி ஆகியோரின் படங்கள் இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் ஒக்ரோபர் 5 ஆம்திகதி தமிழீழ மகளிர் எழுச்சிநாளாக நினைவுகூரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மன்னார் விளையாட்டு போட்டி வெற்றிக்கிண்ணத்தில் மாவீரர்களின் படமாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com