நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் மாவீரர்நாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றது. 3000 வரையிலான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
தேசியக்கொடியினை வீரவேங்கை நரேனின் சகோதரர் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் திரு.போல் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்தோடு நோர்வேயில் உள்ள குடும்பங்களின் மாவீரர்களின் விபரம் தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் தமிழ், நோர்வேஜியன் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓஸ்லோ தவிர்ந்த Stavanger,Bergen, Trondheim,Molde,Hareid ஆகிய நகரங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.






0 Responses to நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)