Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச பொது மன்னிப்பு சபை(Amnesty International) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

"Get on the Bus for human rights " எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர்.

காணமல்போயும் , கடத்தி வைக்கப்பட்டும் உள்ளவர்களது நிலையினை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கொன்று, பர்மிய பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்டமை அனைவரது கவனத்தினையும் பெற்றது.

அண்ணளாவாக 700க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். உள்ளரங்கினைத் தொடர்ந்து, சிறிலங்காவின் உயர்ஆணையத்தினை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், சிறிலங்காவே உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என தொடர் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சான் சுந்தரம், அமெரிக்கர்கள் இவ்வாறு சிறிலங்கா தொடர்பில் அணிதிரள்வதும், குறிப்பாக மாணவ சமூகம் சிறிலங்காவின் விவகாரத்தினை கையிலெடுத்திருப்பது நம்பிக்கையினைத் தருவதாக உளள்ளதென தெரிவித்தார்.

சிறிலங்காவின் முள்வேலிக்குள் அகப்பட்ட தமிழர்கள் மற்றும் வெள்ளைக்கொடியேந்திய தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தமை ஆகியனவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்த ஒவியங்கள் இவ்விரு நிகழ்வுக்களிலும் முக்கிய இடத்தினைப் பிடிந்திருந்தது.

0 Responses to கையிலெடுசிறிலங்கா விவகாரத்தினை த்த அமெரிக்க மாணவ சமூகம் | (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com