சென்னை மாரத்தான் போட்டியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் தெரிரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சென்னையில் வருகிற 27ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் போட்டியை நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
சென்னை மாரத்தானை ஏற்று நடத்தும் ஸ்பான்சர்கள் விடுதலைப்புலிகள் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வராஜா பத்மநாபன் பிடிபட காரணமாக இருந்தவர்கள். அவர்கள் ஏற்று நடத்தும் மாரத்தான் போட்டிகள் நடைபெறக்கூடாது. மீறி நடத்த முயன்றால் போராட்டம் நடத்தப்படும். எந்த மாதிரியான போராட்டம் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.



0 Responses to சீமான் போராட்டம்