
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வே. தங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஊடகத் துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன், அமைச்சர் நிர்மல கொத்தலாவல உட்படப் பலர் கலந்துகொண்டனர். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமார்ச்சாரிய சுவாமிகள், யாழ். ஆயரின் செயலாளர் அருட்திரு.விஜின்ரஸ் அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார். இந்த வைபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண் டனர்.
0 Responses to யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியின் அலுவலகம் நேற்று திறப்பு