Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் வடக்கு கிழக்கில் போலீஸ் நிலையங்களையும் அகற்ற நேரிடும்.

வடக்கு கிழக்கை இணைத்து, குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை’’என்றும் அவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to இன்னும் புலிகளின் அச்சுறுத்தல் ஓயவில்லை: மகிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com