Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் மெதமுலன ராஜமஹா விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து, தனது நிலைமையை கூறி புலம்பியுள்ளதாகவும் 'என் கதை முடிந்து விட்டது. எனது சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நிலைமையை அறிந்து கொண்ட விகாராதிபதி, அங்கிருந்த ஏனைய பிக்குமாரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ஜனாதிபதியுடன் உரையாற்றிய விகாராதிபதி 'பதவிகள் கிடைக்கும், அவை இல்லாமல் போகும். அதுதான் உலக வழமை என்று கீதோபசாரம் சொல்லி இருக்கிறார்.

அத்துடன் தற்போது ஜனாதிபதி கடும் மன அழுத்தம் காரணமாக மதுவை அதிகம் பாவித்துவருவதாகக் கூறப்படுகிறது.

நிறுத்தியிருந்த அந்த கெட்ட பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மேலும் தகவல்கள் தெருவிக்கின்றது, மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை. உடல் நலமே கெடும்' என தெரிவித்துள்ளார் விகாராதிபதி . மது அருந்து குறித்து அவர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to என் சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர்: மகிந்த புலம்பல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com