'விக்ருதி" என்றால் மாறுதல் என்று பொருள். எவ்வாறு ஆண்டுகள் மாறினாலும் தமிழர்களின் வாழ்கையில் மாற்றம் இல்லை கடந்த ஆண்டு சித்திரைப்புத்தாண்டினை தமிழ் மக்கள் முள்ளிவாய்காலில் படுகொலைகளுடனும், பட்டினிகளுடனும், எறிகணைத் தாக்குதல்கள் வான்தாக்குதல்களுக்கு மத்தியில் உயிர்காத்தார்கள்.இவ்வற்றில் இருந்தான ஆண்டு ஒன்றினை கடந்து சித்திரை புத்தாண்டு பல படுகொலைகளுடனும், மர்மக் கொலைகளுடனும் தமிழ் மக்களுக்கு ஈழத்தில் விக்ருதி ஆண்டு பிறந்துள்ளது.
இவ்வாறு புதிய சித்திரை புத்தாண்டினை துப்பாக்கி முனைகளுக்கு முன் வன்னியில் மக்கள் எதிர்கொள்கின்றார்கள்.
பல பேரவலங்களை நிகழ்த்தி தமிழின் படுகொலையினை அரங்கேற்றிவிட்ட மகிந்த அரசும் சிங்கள இனவாதிகளும் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பதை இந்த சித்திரை புத்தாண்டும் உணர்த்தி நிற்கின்றது.



0 Responses to 'விக்ருதி" சித்திரை புத்தாண்டு தமிழர்களின் விரக்த்தியுடன் பிறந்துள்ளது