Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.

பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான்,

’’இனி எங்க அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும். வருமா என்றுகூட தெரியவில்லை. இப்போது நடந்த கொடுமை அவருக்கு தெரியாது.


ஏனென்றால் அவருக்கு நினைவில்லை. நினைவு இருந்திருந்தால் அவர் இந்த தேசமே வந்திருக்கமாட்டார். அய்யா(பிரபாகரன் தந்தை) செத்தது கூட இன்னும் அம்மாவுக்கு தெரியாமல் இருக்கிறது.

அப்படி நினைவில்லாதவரைத்தான் இந்த தேசம் திருப்பி அனுப்பி இருக்கிறது.

.சிதம்பரத்திற்கு தெரியாமல் அம்மா திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்தானே விசா கொடுக்க அனுமதித்தார். அப்புறம் ஏன் திருப்பி அனுப்பினார்.

சிங்கப்பூர்,மலேசியா என் தேசம் . என் இன மக்கள் வாழும் தேசம். அதனால்தான் அம்மாவை அரவணைத்து பார்க்கிறார்கள்.

இந்தியா மோசம். அதனால்தான் திருப்பி அனுப்பினார்கள்’’என்று பேசினார்.

0 Responses to நடந்தது எதுவும் தேசியத் தலைவரின் தாயாருக்கு தெரியாது: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com