Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய இராணுவத்தின் அடாவடித் தனத்தை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்து, தனது உயிரை ஈகம் செய்த அன்னைபூபதி அம்மாவின் 22ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பொதுச்சடரினை ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் உப தலைவர்
திரு. ரெஜினோல்ட் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம், தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனையை உள்ளத்தில் இருத்தி, அன்னை பூபதி அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுக்கட்டுரையும், கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.

ஈழத்தமிழினத்தின் விடுதலைக்காக தங்களினுடைய இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்களை நாம் ஒரு பொதும் மறந்துவிடலாகாது. அப்படி மறந்தால் நாம் மனிதர்களேயில்லை. புலம் பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற நினைவு வணக்க நிகழ்வுகளில் நாம் ஒவ்வொருவரும் நிறைந்த பங்களிப்பை வழங்குவது நமது தலையாய கடமையாகும்.

0 Responses to அன்னைபூபதி நினைவு வணக்க நிகழ்வு: பிரான்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com