Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம் வீர காவியம் நின்னு கேளுடா...: கவிதை

பதிந்தவர்: தம்பியன் 16 August 2010

எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!

எம் வீர காவியம்
நின்னு கேளுடா
ஈழமுன்னா வெறும்
மண்ணு இல்லைடா..

புலி கொடி பறந்து
ஆண்ட தேசம்டா
உலகை;
இன்றும் தாங்கும்
ஒற்றை இனமடா!

பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா;

பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த வர்கம்டா..!

காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா;

குழந்தையும் குடும்பமும்
மாண்ட சோகம்டா
கொலைவெறி தரித்து
நடந்த துரோகம்டா!

அறுபது வருடம்
எரியும் நெருப்புடா
அநீதி அழிந்திட
பூண்ட போருடா;

இரண்டில் ஒன்றே
பார்க்கும் வீரம்டா
எதிர்க்கும் காலம்
தூரமில்லடா!

குண்டுகளெல்லாம்
உமிழும் எச்சில்டா
உயிரே கூட
துச்சமில்லடா;

ஈழம் ஒன்றே
கனவு கனவுடா..
விடுதலை ஒன்றே
எல்லை கோடுடா!

காலம் என்ன -
களையா பறிக்கு(ன்)டா????????

காலம் என்ன – எமை
களையா பறிக்கு(ன்)டா -
ஈழம் வெல்ல -
எதிர்த்தா நிற்கும்டா??

ஓரங் கட்டி
நின்ற கணக்கெலாம்
வீரம் பூட்டி
வெல்வதுறுதிடா;

யாம் சேர்ந்தால் ஞாலம்
சுருண்டு போகும்டா -
தமிழன் மூச்சின் வெப்பம்
ஈழம் வெல்லும்டா!!

யாமும் ஓர்தினம்
ஆளுவோமடா -
தமிழன் – ஆண்ட பெருமையை
பாடுவோமடா;

உரக்கக் கத்தி
கூறுவோமடா
ஈழ விடுதலை வெல்லவே
சுவாசிப்போமடா!

வெற்றி என்பது
வெறும் – பேச்சி இல்லடா
புலிக்கொடி பறக்கும்
சாட்சி நாளடா;

இதை நெஞ்சிலேற்றி
நித்தம் வாழடா
விடுதலை வெல்ல
உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!

வித்யாசாகர்

********************************************

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to எம் வீர காவியம் நின்னு கேளுடா...: கவிதை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com