Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், ‘போர் முகங்கள்என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் இன்று காலை தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை 10 மணியளவில் நடந்தது. நிகழ்வுக்கு, .தி.மு.. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்..நிஜாம் தலைமை தாங்கினார். .தி.மு.. நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ..சரவணன், இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் திரு. எம்.எஸ்.செல்லப்பா, .தி.மு.. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் ஈழன் ஆகியோர் தொடக்க விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியைத் திறந்து வைத்து, .தி.மு.. பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் தி..சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி திரு. லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார்.

எராளமான உணர்வாளர்களும், மாணவ மாணவியரும் ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டபடி உள்ளனர். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது! வை.கோ தொடக்கி வைத்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com