மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்கில் சில விஷமிகள் திட்டமிட்ட பல பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். மாவீரர் தினவிழாவில் நுளைவுக் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், மக்கள் கோயில்களுக்கே செல்லவேண்டும் எனவும் பல குறுந்தகவல்கள் வெளியாகியிருந்தது. இருப்பினும் இதனைப் பொருட்படுத்தாது மக்கள் மாவீரர் தின நிகழ்வுக்கு எழுச்சியோடும், உணர்ச்சிபூர்வமாகவும் கலந்துகொண்டு இந் நிகழ்வுகளை அனுஷ்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அகவணக்கத்தில் ஈடுபட்டிருந்தமை தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு செயலாக அமைந்திருந்தது.



0 Responses to லண்டன் தேசிய நினைவெழுச்சி நாளில் 40,000 மக்கள் பங்கேற்பு (காணொளி, படங்கள் இணைப்பு)