பிரான்சின் மக்கள் பிரதிநிதிகள், உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் – தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன்(சுதன்ராஜ்) மற்றும் மகிந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கெடுத்தனர்.மேலும் ஜேர்மன் மக்கள் பிரதிநிதிகள், கல்வி பண்பாடு உடல்நலத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன் – நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா இராஜேந்திரா மற்றும் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு – நாடு கடந்த தமிழீழ அரசு எதிர்கொள்ளும் சாவால்கள் – முக்கியத்துவம்; உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் இக்கருத்துப் பகிர்வில் மக்களுடன் மக்கள் பிரிதிநிதிகள் பரிமாறிக் கொண்டனர்.
இத்தகைய மக்கள் கருத்துப் பகிர்வுகள், ஜேர்மனியின் பிற மாநிலங்களிலும் படிப்படியாக நடாத்தப்படுமென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to டொட்முன்ட் பகுதியில்நடைபெற்ற கருத்தரங்கு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்