பதிந்தவர்:
தம்பியன்
06 January 2011
மாதந்தை என்று தமிழர்களால் போற்றப்படும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மரணித்து இன்றுடன் ஒரு வருடகாலமாகிறது.
அவருடைய பாரியார் தற்போது ஊறணி வைத்தியசாலையில் இருக்கிறார்.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இலங்கை அரச சேவையில் உயர் பதவி வகித்தவர்,
ஓய்வூதியம் பெற்றவர்.
இவர் இறந்த பின்னர் முறைப்படி இவருடைய பாரியாருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
கணவன் இறந்து ஒரு வருடங்கள் ஆகியும் ஓய்வூதியம் கூட பெற முடியாத நிலையிலேயே யதார்த்தம் உள்ளது.
ஓய்வூதியத்தையே ஓராண்டில் பெற முடியவில்லை என்றால் போரில் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு பற்றி பேசவா வேண்டும்.
இதுதான் இன்றைய வடக்கின் வசந்தம் என்கிறார்கள் பலர்.
0 Responses to ஒரு வருடமாகியும் பார்வதியம்மாளுக்கு ஓய்வூதியம் இல்லை - வடக்கின் வசந்தம்