Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்றைய தினம் (20.07.2011) சிறப்பு விமானம் மூலம் சென்னை சென்ற அமெரிக்க ராஜாங்கச் செயலாளரும் உலகின் பலம்மிக்க பதவியில் இருப்பவருமான திருமதி கிலரி கிளிங்கடன் அவர்கள் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் நாடு தலைமைச் செயலகத்துக்கு சென்ற கிலரியை வரவேற்ற செல்வி ஜெயலலிதா அவருடன் சுமார் 1 மணிநேரமாக கலந்துரையாடியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதில் முதல் இடம் வகித்ததும், மற்றும் முதன்மையாகப் பேசப்பட்ட விடையமாக இலங்கைத் தமிழர் பிரச்சனை இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள அகதிகள் தொடர்பாகவும், தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் செல்வி ஜெயலலிதா கிலரிக்கு சில தகவல்களை எடுத்துரைத்துள்ளார். இதனை அடுத்து ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தம்மிடம் சில யோசனைகள் இருப்பதாகவும் அதனை செயல்படுத்த தாம் விரும்புவதாகவும் கிலரி கிளிங்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு பதிலளித்த கிலரி கிளிங்டன் அவர்கள் தாம் அனைத்தையும் அறிவோம் எனக் கூறியுள்ளார்.

இவர்கள் கலந்துரையாடலில் ஈழத் தமிழர்கள் குறித்து பல முக்கியவிடையங்கள் ஆராயப்பட்டாலும் ராஜதந்திர இரகசியக் காப்புக் காரணமாக அனைத்தையும் இங்கே வெளியிட முடியவில்லை. தொடர்ந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடைமுறை தொடர்பிலும், தமிழ் நாட்டில் அமெரிக்காவின் முதலீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தமிழ் நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவலாம் எனவும் செல்வி ஜெயலலிதா பரிந்துரைத்தார்.

தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்த கிலரி கிளிங்டன் அவர்கள், செல்வி ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் பலத்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்ற செல்வி ஜெயலலிதாவை அமெரிக்கா அவதானித்துவருவதாகவும் அங்கு நடந்த ஆட்சிமாற்றம் பற்றி அவர்கள் உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அதிர்வு

0 Responses to ஒரு மணிநேரமாக ஜெயலலிதா ஹிலாரிக்கு என்ன சொன்னார்? தலையைப் பிய்க்கும் இலங்கை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com