இனப்படுகொலை செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்திய அரசு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து கவுரவித்து, மக்களவைக்கு அழைத்த இந்திய அரசைக் கண்டித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அபாவித் தமிழர்களைக் கொன்று குவித்த மகிந்தா இராசபக்சேவின் சகோதரரும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகமான சமல் இராசபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை மதிக்காமல், போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.
இனப்படுகொலையை நடத்திய இராசபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃஃபார்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி இராசபக்சே எவ்வளவோ முயன்றும் அவøர சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளிஃயற நேரிட்டது. அதேபோல் இராசபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திக்கின்றன.
இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும் அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழகத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும்
இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவிற்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, இராசபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈழத்தில் இனப்படுகொலை செய்தவர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பா: ராமதாஸ்
பதிந்தவர்:
Anonymous
01 August 2011



0 Responses to ஈழத்தில் இனப்படுகொலை செய்தவர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பா: ராமதாஸ்