அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோவுக்கு 5 ரூபாயும், சன்னரக அரிசி விலை கிலோவுக்கு ரூ 10 முதல் ரூ 15 வரையும் உயர்ந்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையில் பெரும்பான்மையான மக்கள் வெளிச்சந்தையில் இருந்து அரிசி வாங்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர். எனவே வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி பரப்பு பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதனால் இனிவரும் மாதங்களில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அரிசி விலையை கட்டுக்குள் வைக்க தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Responses to அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்