Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரருக்கு அஞ்சலி 2012

பதிந்தவர்: தம்பியன் 25 November 2012

தலமுறை வாழ தலைகொடுத்த
மாவீரருக்கு அஞ்சலி-2012

மானத் தலமுறை தலைநிமிர்;ந்;து வாழ
வீரத்தமிழர்களாய் தலை புதைத்த தீரர்களே..!
பூகூடை கையேந்தி தேடுகின்றோம் உம்மை
தேசமெலாம்தேடி. கைகூப்பி அஞ்சலித்து நிற்கின்றோம்.

வஞ்சகபகை கொண்ட மதிகெட்ட சிங்களத்தின்
நாடி நரம்பறுக்க காலமது தேடிவரும்.
பொறுத்தபடி கொஞ்சம் பொறுமையாய் தூங்கிடுங்கள்
ஆண்டுபலகோடி ஆனாலும் உங்கள் நினைவலைகள்
துமிழர் நெஞ்சத்து குருதி துடிப்பதுவாய்
நொடிக்குநொடி நொந்தபடி மலர்தூவி அஞ்சலிக்கும்.

ஈரமில்லா இதயம்கொண்ட கொடியோர் செயலாய்நீ
ஆரண்மனையாய் வாழ்திருந்த ஆலயம் அழிந்திடலாம்
கோவில் தெய்வமாய் மலர்தூவி வணங்கிடும்தமிழர்
கோடியாண்டுகள் ஆனாலும் தம்நெஞ்சில் சுமந்திருப்பார்..!

முள்ளி வாய்காலில் புதைபட்ட தமிழர்படை
விழித்தெழுவார் நிச்சயம.; வெடிப்பார் குண்டாக..!
நச்சுவாயிவு குண்டிலே எரிந்த தமிழர்படை
நந்திக் கடல்கலந்த தமிழர் குருதியலை
பொங்கியெழும் நிச்சயம் பகையெரிக்கும் தீயாக..!

மாவீரர் தெய்வங்களே..! மானத் தமிழர்களே..! எம்மை
தவறாக எடைபோட்ட பலம்கொண்ட உலகத்தார்
உண்மை புரிந்திட்டார் தவறால் தலையை குனிந்திட்டார்
உங்கள் இலட்சிய தமிழீழ விடிவெள்ளி அருகில்தெரியுதடா..!
அமைதியுடன் நீங்கள் கண்மூடி உறங்கிடுங்கள்.
தமிழர் ஒற்றுமைக்கு பாலமதை உடன்போட்டு தந்திடுங்கள்.

தமிழா.!தெய்வத்தை வணங்கிடவும் கட்சிரண்டு வேண்டிடுமா.!?
பெற்றவருக் குள்ளும் பெரியவர் சிறியவரா..!?
வேற்றுமையால் நாம்கண்ட வேதனைகள் போதாதா..!?
கண்மூடி இதயத்தை கனிவோடு தொட்டுப்பார்
உண்மைதனை உனக்கு உறுதியாய் சொல்லுமடா..!
நம்பிக்கையோடு

வேலணையூர் பொன்னண்ணா

டென்மார்க்

0 Responses to மாவீரருக்கு அஞ்சலி 2012

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com