Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 2000 ஆயிரம் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சம் நீடித்துவரும் நிலையில், இவ்விவகாரத்தினை எதிர்கொள்வதற்கான அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைவுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போருக்கு பிந்திய இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான உயிரச்சுறுத்தல்கள் சிறிலங்கா அரசினால் நீடித்துவரும் நிலையில், இவ்விவகாரத்தினை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வது குறித்தும் மற்றும் பல்வேறு வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான ஓருங்கிணைவுக் கூட்டமாக இது இடம்பெறுகின்றது.

எதிர்வரும் 26ம் திகதி மாலை 3.30மணிக்கு FIMM Suisse, Speichergasse 39, 3011 Bern எனும் இடத்தில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது.

இதேவேளை சுவிஸில் அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சுவிஸ் அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்களத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சின் சர்வதேச வழக்கறிஞர் டேவிட் மேத்தா அவர்கள் இவ்வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்துடனும் பேச்சுவாத்தைகளை நடத்த இருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுவிஸில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைவுக் கூட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com