Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழக நடிகர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுகின்றமையை இலங்கையில் உள்ள நடிகர்கள் கண்டித்துள்ளனர்.

பிரபல சிங்கள திரைப்பட நடிகர் ரவீந்தர ரந்தெனியா இந்த விடயத்தை கண்டித்துள்ளார். தமிழகத்தில் அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
இதற்கு ஆதரவாக நடிகர்களும் கலந்துக் கொள்ளவிருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் தமிழ் நடிகர்கள் கலந்துக் கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழக நடிகர்களின் போராட்டத்தை சிங்கள நடிகர்கள் கண்டித்துள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com