Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”




காங்கிரஸின் அனைத்து தொண்டர்களும், அரசியல் தலைவர்களும் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவதையே விரும்புகிறார்கள். ராகுல் பிரதமராவார் என நாங்களும் உறுதியாக நம்புகிறோம். அவர் மட்டுமே இந்தியாவின் அடுத்த பிரதமராக முடியும் என காங்கிரஸ் பேச்சாளர் ரஷீத் அல்வி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் உண்டு. அவர் தனக்கே உரிய பாணியில் சிந்திக்கிறார்.

தூரநோக்குடையவர். அவர் எப்போது பிரதமரானாலும், அதற்கு மிக தகுதியான திறமையுடைய ஒரு நபராகவே நாம் அவரை பார்க்கிறோம் என ரஷீத் அல்வி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர் காங்கிரஸ் கூட்டணியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவிக்கைவில், ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஒரு போதும் நிராகரித்ததில்லை. மக்கள் அதை விரும்புகிறார்கள் எனில் அவர் ஏன் அதை நிராகரிக்க போகிறார்? எப்போது அதற்குரிய நேரம் சரியாக வருகிறதோ, எப்போது காங்கிரஸுக்கு, ராகுல் காந்தியை பிரதமராக்கும் முடிவுக்கு பெரும்பான்மையான உறுதியான ஆதரவு கிடைக்கிறதோ அப்போது நிச்சயம் ராகுல் காந்தி அழைப்பை ஏற்றுக்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ராகுல் காந்தி மாத்திரமே இந்தியாவின் பிரதமராக முடியும் : மீண்டும் காங்கிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com