போர்க்குற்ற விசாரணைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் எந்தப்பயனும் இல்லை; மக்கள் போராட்டம் ஒன்றே வழி என்றும், போர்க்குற்ற விசாரணயை நம்பித்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே இருக்கின்றது என்றும் இரு துருவங்கள் இருக்கின்றன. இவ்விரண்டையும் முற்றாக மறுக்காமலும், அதே நேரத்தில் முற்றாக ஏற்காமலும் நம்முன் உள்ள நடைமுறை சார்ந்த திசை வழி என்ன?
தமிழரைக்காப்போம் (Save Tamils Movement) அமைப்பின் சார்பில் "ஐ.நா. தீர்மானமும் ஈழத்தின் திசை வழியும்" என்ற தலைப்பில் நேற்று ஞாயிறு மாலை சென்னை தி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மாணவி திவ்யா, சென்னைப்பல்கலைக்கழக பேராசிரியர் தோழர் மணிவண்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, பேராசிரியர் தோழர் சரஸ்வதி, சேவ் தமிழ்சு இயக்கத்தோழர் செந்தில் ஆகியோர் உரையாற்றினர்.



0 Responses to ’’ஐ.நா. தீர்மானமும் ஈழத்தின் திசை வழியும்’’ கருத்தரங்கு!