1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆழ்ந்த கவலை கொள்கின்றேன் என கனடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார்.
1983 ஜூலை 23 ம் தேதியில் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்து அடித்தும் துரத்தப்பட்டனர்.
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அழிக்கப்பட்டன.
இந்த கொடூரமான நடவடிக்கைகள் மற்றும் இதயம் நொறுங்கும் இழப்பு விளைவுகளை இன்னும் இலங்கையில் வாழும் தமிழர்கள் போல் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் உணர்கின்றேன்.
புதிய ஜனநாயக கட்சி இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் நடவடிக்கை பற்றி கவலை அடைகின்றது.
கறுப்பு ஜூலை 23, 1983 நினைவு கொள்ளும் அதேநேரம் எமது பொது சபை தமிழ் கனடியர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவோம்.
நாங்கள் கனடிய அரசாங்கத்தினை உறுதியான இராஜதந்திர நடவடிக்கை எடுக்குமாறும், இந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணை நடத்த மறுப்பது தொடர்பாக கனடிய அரசாங்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். என்று ராதிகா சிற்சபேசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அழிக்கப்பட்டன.
இந்த கொடூரமான நடவடிக்கைகள் மற்றும் இதயம் நொறுங்கும் இழப்பு விளைவுகளை இன்னும் இலங்கையில் வாழும் தமிழர்கள் போல் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் உணர்கின்றேன்.
புதிய ஜனநாயக கட்சி இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் நடவடிக்கை பற்றி கவலை அடைகின்றது.
கறுப்பு ஜூலை 23, 1983 நினைவு கொள்ளும் அதேநேரம் எமது பொது சபை தமிழ் கனடியர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவோம்.
நாங்கள் கனடிய அரசாங்கத்தினை உறுதியான இராஜதந்திர நடவடிக்கை எடுக்குமாறும், இந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணை நடத்த மறுப்பது தொடர்பாக கனடிய அரசாங்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். என்று ராதிகா சிற்சபேசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Responses to இலங்கை 1983 இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆழ்ந்த கவலை!- ராதிகா சிற்சபேசன்!