Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் மர்மமான முறையில் இறந்த உயிரிழந்த சென்னை மாணவி ஜியார் ஜியன்னாவின் உடல், இன்று மறு பிரதே பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு முகப்பேர் காவல் நிலையத்தில்  சட்டம்,ஒழுங்கு பிரிவின் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தாம்சனின் மகள் ஜியார் ஜியன்னா. இவர் லண்டனில் உள்ள பல்கலை  கழகத்தில், ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் திகதி ஜியார் ஜியன்னா மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இவர் தற்கொலை செய்து கொண்டதாக லண்டன் போலீசாரால் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது இறப்பு குறித்த மர்மத்தை லண்டன் போலீசார் கூற மறுப்பதாகவும், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதோடு, தமது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து,  அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார் தாம்சன்.

அதன் அடிப்படையில், இன்று முதல் கட்டமாக ஜியன்னாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய லணடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to லண்டனில் உயிரிழந்த சென்னை மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com