Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சுப்பிரமணியசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சுப்பிரமணிய சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

0 Responses to இலங்கை தீர்மானம்: மன்மோகன் சிங்குக்கு சாமி பாராட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com