Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான தடையை அமெரிக்காவும் புறக்கணித்துள்ளது.

ஏற்கனவே இந்த தடையை தமது நாட்டில் அமுலாக்கப் போவதில்லை என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்த தடையை நிராகரிக்க தீர்மானித்திருப்பதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுடன் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி தூதுவர் நிசா பீஸ்வால் கடந்த வாரம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் இந்த தடையை அமெரிக்கா அமுல்படுத்தாது என்று இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 Responses to புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடை! அமெரிக்காவால் புறக்கணிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com