Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு இடம்பெற்ற பகுதிகளை இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்று அவதானித்த பின் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து கல்வி வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். அவர்கள் விரும்பினால் கொழும்பிலும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com