Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் மதமாற்றம் சடங்கு நடைபெற்றுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் சுமார் 50 பேரை இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்யும் சம்பிரதாய நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினார்கள் என்பதுக் குறிப்பிடத் தக்கது.தாய் மதத்துக்கு திரும்பும் மக்களைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் கூறியுள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரா,மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மதமாற்றம் நடைபெற்று வந்த நிலையில் தென் மாநிலங்களில் கேரளாவில் மதமாற்றம் செய்யும் சடங்கு நிகழ்ப்பெற்றது.இதைத் தொடர்ந்து சென்னையிலும் மதமாற்றம் நடைபெற்று இருப்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் மதமாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com