Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானியத் தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பிரித்தானிய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ஆகியோர் அங்கு தமது செய்திகளை அனுப்பியிருந்த நிலையில், அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் இதில் நேரடியாக கலந்துகொண்டார்கள்.

இங்கு செய்திகளை அனுப்பிய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அங்கு நேரடியாகக் கலந்துகொண்ட அனைவருமே இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன, சர்வதேச விசாரணை நடக்க வேண்டும் என்று மீண்டும் வலியுத்தினார்கள்.

அதேவேளை, இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்து வருகின்ற சில நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டினார்கள். 'இலங்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று பிரித்தானியப் பிரதமர் அங்கு தனது செய்தியில் கூறியிருந்தார்.

0 Responses to இலங்கை ஐ.நா. விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: டேவிட் கமரூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com