நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உண்மையான அர்த்தம் பொருந்தியதாக ஆக்குவதன் மூலம் அந்த உன்னத நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட இன்றைய தினத்தில் உறுதி பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “67வது தேசிய சுதந்திர தினத்தை ஒரு நாகரிகமான அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே கொண்டாடுகின்றோம்.
இலங்கையின் முதலாவது பிரதம தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே சுதந்திரப் போராட்டத்திற்கு பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்த சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த ஒற்றுமையைப் பாதுகாத்த வண்ணம் அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிப்பதே தேசத்தின் சவாலாக இருந்தது.
ஆனாலும், துரதிஷ்டவசமாக அந்த சவாலை வெற்றி கொள்வதற்கு எம்மால் முடியவில்லை. தற்போது, அவ்வாறான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமொன்று மீண்டும் எமக்குக் கிடைத்துள்ளது.
பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மதங்களைப் பின்பற்றும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் தேசத்தின் நலனின் ஒரு பொது நோக்கத்திற்காக சகல பேதங்களையும் மறந்து ஒரு மேடையில் ஒன்றிணைந்துள்ளன.
ஒற்றுமையாகக் கூடி ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் ‘லிச்சவி’ எனும் அரச நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப் பாட்டுடன் கூடி ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும்.” என்றுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “67வது தேசிய சுதந்திர தினத்தை ஒரு நாகரிகமான அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே கொண்டாடுகின்றோம்.
இலங்கையின் முதலாவது பிரதம தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே சுதந்திரப் போராட்டத்திற்கு பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்த சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த ஒற்றுமையைப் பாதுகாத்த வண்ணம் அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிப்பதே தேசத்தின் சவாலாக இருந்தது.
ஆனாலும், துரதிஷ்டவசமாக அந்த சவாலை வெற்றி கொள்வதற்கு எம்மால் முடியவில்லை. தற்போது, அவ்வாறான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமொன்று மீண்டும் எமக்குக் கிடைத்துள்ளது.
பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மதங்களைப் பின்பற்றும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் தேசத்தின் நலனின் ஒரு பொது நோக்கத்திற்காக சகல பேதங்களையும் மறந்து ஒரு மேடையில் ஒன்றிணைந்துள்ளன.
ஒற்றுமையாகக் கூடி ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் ‘லிச்சவி’ எனும் அரச நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப் பாட்டுடன் கூடி ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும்.” என்றுள்ளார்.




0 Responses to நாகரிகமான அரசியல் கலாசாரத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்: ரணில் விக்ரமசிங்க