உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை பற்றிய விவாதங்கள் இப்போது சூடுபிடித்துள்ளன. இந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை அடுத்து, இன்னமும், முனைப்படையும் வாய்ப்புகள் உள்ளன.
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுப்பதில், கூடுதலான அக்கறை செலுத்தி வருபவர்களில் முக்கியமானவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணையைத் தவிர்க்க வேண்டுமானால், உள்நாட்டு விசாரணையை உடனடியாகத் தொடங்குவது மட்டும் தான் இப்போதுள்ள ஒரே வழி என்று அவர் தெளிவாகவே கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் என்ற வகையிலும், லக் ஷ்மன் கதிர்காமரின் வழியில், சென்று சர்வதேச சமூகத்தை கைக்குள் போட்டுக் கொள்ளும் உத்தியைக் கையாள்பவர் என்ற வகையிலும், மங்கள சமரவீரவின் இந்த திட்டத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
வெளிவிவகார அமைச்சை எல்லா வகையிலும் லக் ஷ்மன் கதிர்காமர் காலத்து நிலைமைக்கு கொண்டு வருவதே மங்கள சமரவீரவின் கனவு.
லக்ஸ்மன் கதிர்காமர் தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச சூழலை உருவாக்கியவர்.
சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது அணுகுமுறைகள், சந்திரிகா அரசாங்கத்துக்குப் பெரிதும் கைகொடுத்திருந்தன.
ஆனால், போர் அரங்கில் விடுதலைப் புலிகள் பெற்றிருந்த மேலாதிக்கம் தான், அப்போது சந்திரிகா அரசாங்கத்துக்கு கிடைத்திருந்த சர்வதேச ஆதரவை வைத்துக் கொண்டு போரில் வெற்றியைப் பெறுவதற்குத் தடையாக இருந்தது.
இப்போது, லக் ஷ்மன் கதிர்காமர் எதிர்கொண்டளவுக்கு நெருக்கடியை மங்கள சமரவீர எதிர்கொள்ள வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், மங்கள சமரவீரவுக்கு முக்கியமான சவால் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இருந்தாலும், இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமும், இலங்கையில் அமெரிக்க நலனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமும் அமெரிக்காவிடம் இருப்பது. இலங்கைக்குக் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமாகும்.
முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை சர்வதேச அரங்கில் பாதுகாப்பதற்கு சீனா எந்தளவுக்கு ஈடுபாடு காட்டியதோ, அதே அளவுக்கு இப்போதைய அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா ஈடுபாடு காட்டும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதுபோன்றதொரு வாய்ப்பான சூழல் லக் ஷ்மன் கதிர்காமருக்கு கிடைத்திருக்கவில்லை. முன்னைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் கிடைத்திருக்கவில்லை. எனவே, மங்கள சமரவீரவுக்கு இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை லக் ஷ்மன் கதிர்காமரின் காலத்துக்கு கொண்டு செல்வதில் அவ்வளவு சிக்கல்கள் எழாது.
ஆனாலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மங்கள சமரவீர அமெரிக்காவே எல்லாவற்றையும் கையாளும் என்று அமைதியாக இருந்து விட முடியாது. ஏனென்றால் அதற்கான காலகட்டம் கடந்து விட்டது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசத்தை முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் இதற்கான விசாரணையை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அந்த விசாரணைகள் முடிவுக் கட்டத்தை எட்டியும் விட்டன.
எனவே, இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணைகளைக் கண்டும் காணாதது போன்று அமெரிக்காவினால் திடீரெனக் கைவிட்டு விடமுடியாது.
ஏனென்றால், அமெரிக்கா தான் இந்த விசாரணைகளை நடத்த வேண்டும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதல் நாடு.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் முக்கியமாகவும் முதன்மையாகவும் பணியாற்றியது அமெரிக்கா தான்.
எனவே, இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது என்ற காரணத்தை முன்வைத்து, திடீரென போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை அமெரிக்கா தொப்பென்று கைவிட்டு விட முடியாது.
ஒரு காலஅவகாசத்தைக் கொடுக்கலாம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொஞ்சம் பின் தள்ளிவைக்க உதவலாம். அதையே தான் இப்போது அமெரிக்கா செய்யத் தயாராகியிருக்கிறது.
அதேவேளை, சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், இலங்கையின் படை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க நேரிடும் என்று கூறியிருக்கும், மங்கள சமரவீர அதனைத் தடுப்பதற்கே, உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம், சர்வதேச விசாரணையின் அடுத்த கட்டத்துக்கு முட்டுக்கட்டை போடலாம் என்று மங்கள சமரவீர எதிர்பார்க்கிறார்.
அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும், உள்நாட்டு விசாரணை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் திடீர் முடக்க நிலையை அடையும் சாத்தியங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.
சர்வதேச விசாரணை என்பது தமிழர்களின் நீண்டநாள் வலியுறுத்தலாக இருந்து வந்தது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை, முழு அளவில் இல்லாவிடினும், ஓரளவுக்கேனும் தமக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஜனவரி 8இற்குப் பிந்திய அரசியல் சூழல் இந்த எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் அனைத்தையுமே பொடிப்பொடியாய் நொறுக்கி விடுமோ என்ற அச்சத்தை தமிழ்மக்கள் மத்தியில் இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி கிடைக்காது என்ற நிலையில் தான் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதாக உள்நாட்டில் நடத்தப்பட்ட விசாரணைகள் எதுவுமே, அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தவறியிருந்தன. அதனால் தான் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் தமக்கு நீதி கிடைக்காது என்று தமிழ்மக்கள் உறுதியாக நம்பினர்.
அதுபோலவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விசாரணை என்று மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளுமே, தமிழ்மக்களின் அந்த அவநம்பிக்கை சரியானது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. இதனால், ஐ.நா. நடத்தும் சர்வதேச விசாரணை மீது தமிழ் மக்கள் அதிகளவு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.
திடீரென அந்த செயல்முறைகள் முடக்கப்பட்டு உள்நாட்டு விசாரணைகள் மீண்டும் தொடங்கப்படுவது தமிழ்மக்களை மேலும் அவநம்பிக்கைக்கு உள்ளாக்கும் நிலையையே ஏற்படுத்தும்.
உள்நாட்டு விசாரணையாலும், சர்வதேச விசாரணையாலும் எந்தப் பயனுமில்லை என்ற கருத்து தமிழ்மக்களிடம் மேலோங்கும் நிலை உருவாகலாம்.
ஏற்கனவே புதிய உள்நாட்டு விசாரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு விசாரணைகள் குறித்து தமிழ்மக்கள் கொள்ளும் சந்தேகத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது.
உள்நாட்டு விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? அத்தகைய தண்டனைகள் எந்தளவுக்கு உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல் லப்பட்ட - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
போர்க்குற்றங்கள் தொடர்பாக அவரே பதிலளிக்க வேண்டியவர்.
இப்போது அவர் அதிகாரத்தில் இல்லாது போனாலும், இதுகுறித்து அவரிடம் எந்த விசாரணையும் நடத்தவோ, வழக்குத் தாக்கல் செய்யவோ முடியாது.
ஏனென்றால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டப்படி, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, ஓய்வுபெற்ற பின்னர் விசாரணைகளை நடத்தவோ தண்டிக்கவோ முடியாது.
இதனை அடிப்படையாக வைத்து தான், ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள், அதிகாலையில் அலரி மாளிகையில், ஆட்சியைத் தக்கவைக்கும் இராணுவச் சதித்திட்டம் குறித்து மஹிந்த ராஜபக் ஷவிடம் விசாரணை நடத்த முடியாது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியிருந்தார்.
இப்படியான நிலையில், உள்நாட்டு விசாரணையில், போருக்குப் பொறுப்பாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவிடம் எவ்வாறு விசாரணை நடத்தப்படும், அதில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் எவ்வாறு தண்டிக்கப்படுவார்? என்ற கேள்வி இருக்கிறது.
அதைவிட, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தி, குற்றவாளியாக காணப்படுவோருக்குத் தண்டனை விதிக்கலாம் என்றும், பின்னர் சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம் என்றும் யோசனை கூறியிருக்கிறார் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா.
இது மோசமானதொரு ஆலோசனை என்பதில் சந்தேகமில்லை. அதைவிட உலகத்தையும் தமிழ்மக்களையும் ஏமாற்றும் வகையிலானது.
பெயருக்கு ஒரு விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம் என்பது, நீதியை வழங்கும் முறையாக எப்படிக் கருத முடியும்.
இதுபோன்ற குறுக்குவழித் திட்டங்களின் மூலம், உள்நாட்டு விசாரணைகளை இப்போதைய அரசாங்கம் நடத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறான நீதிக்கு அப்பாற்பட்ட செயல்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு சர்வதேசம் அனுமதிக்குமேயானால், அது தமிழ்மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
இன்னும் இன்னும் குரோத மனப்பான்மையும், அவநம்பிக்கையையும், தான் ஏற்படுத்தும். அதற்குத் தான் உள்நாட்டு விசாரணை இடமளிக்கப் போகிறது என்றால், அது நிலையான அமைதிக்கான வழிமுறையாக இருக்காது.
சுபத்ரா
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுப்பதில், கூடுதலான அக்கறை செலுத்தி வருபவர்களில் முக்கியமானவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணையைத் தவிர்க்க வேண்டுமானால், உள்நாட்டு விசாரணையை உடனடியாகத் தொடங்குவது மட்டும் தான் இப்போதுள்ள ஒரே வழி என்று அவர் தெளிவாகவே கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் என்ற வகையிலும், லக் ஷ்மன் கதிர்காமரின் வழியில், சென்று சர்வதேச சமூகத்தை கைக்குள் போட்டுக் கொள்ளும் உத்தியைக் கையாள்பவர் என்ற வகையிலும், மங்கள சமரவீரவின் இந்த திட்டத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
வெளிவிவகார அமைச்சை எல்லா வகையிலும் லக் ஷ்மன் கதிர்காமர் காலத்து நிலைமைக்கு கொண்டு வருவதே மங்கள சமரவீரவின் கனவு.
லக்ஸ்மன் கதிர்காமர் தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச சூழலை உருவாக்கியவர்.
சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது அணுகுமுறைகள், சந்திரிகா அரசாங்கத்துக்குப் பெரிதும் கைகொடுத்திருந்தன.
ஆனால், போர் அரங்கில் விடுதலைப் புலிகள் பெற்றிருந்த மேலாதிக்கம் தான், அப்போது சந்திரிகா அரசாங்கத்துக்கு கிடைத்திருந்த சர்வதேச ஆதரவை வைத்துக் கொண்டு போரில் வெற்றியைப் பெறுவதற்குத் தடையாக இருந்தது.
இப்போது, லக் ஷ்மன் கதிர்காமர் எதிர்கொண்டளவுக்கு நெருக்கடியை மங்கள சமரவீர எதிர்கொள்ள வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், மங்கள சமரவீரவுக்கு முக்கியமான சவால் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இருந்தாலும், இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமும், இலங்கையில் அமெரிக்க நலனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமும் அமெரிக்காவிடம் இருப்பது. இலங்கைக்குக் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமாகும்.
முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை சர்வதேச அரங்கில் பாதுகாப்பதற்கு சீனா எந்தளவுக்கு ஈடுபாடு காட்டியதோ, அதே அளவுக்கு இப்போதைய அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா ஈடுபாடு காட்டும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதுபோன்றதொரு வாய்ப்பான சூழல் லக் ஷ்மன் கதிர்காமருக்கு கிடைத்திருக்கவில்லை. முன்னைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் கிடைத்திருக்கவில்லை. எனவே, மங்கள சமரவீரவுக்கு இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை லக் ஷ்மன் கதிர்காமரின் காலத்துக்கு கொண்டு செல்வதில் அவ்வளவு சிக்கல்கள் எழாது.
ஆனாலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மங்கள சமரவீர அமெரிக்காவே எல்லாவற்றையும் கையாளும் என்று அமைதியாக இருந்து விட முடியாது. ஏனென்றால் அதற்கான காலகட்டம் கடந்து விட்டது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசத்தை முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் இதற்கான விசாரணையை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அந்த விசாரணைகள் முடிவுக் கட்டத்தை எட்டியும் விட்டன.
எனவே, இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணைகளைக் கண்டும் காணாதது போன்று அமெரிக்காவினால் திடீரெனக் கைவிட்டு விடமுடியாது.
ஏனென்றால், அமெரிக்கா தான் இந்த விசாரணைகளை நடத்த வேண்டும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதல் நாடு.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் முக்கியமாகவும் முதன்மையாகவும் பணியாற்றியது அமெரிக்கா தான்.
எனவே, இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது என்ற காரணத்தை முன்வைத்து, திடீரென போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை அமெரிக்கா தொப்பென்று கைவிட்டு விட முடியாது.
ஒரு காலஅவகாசத்தைக் கொடுக்கலாம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொஞ்சம் பின் தள்ளிவைக்க உதவலாம். அதையே தான் இப்போது அமெரிக்கா செய்யத் தயாராகியிருக்கிறது.
அதேவேளை, சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், இலங்கையின் படை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க நேரிடும் என்று கூறியிருக்கும், மங்கள சமரவீர அதனைத் தடுப்பதற்கே, உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம், சர்வதேச விசாரணையின் அடுத்த கட்டத்துக்கு முட்டுக்கட்டை போடலாம் என்று மங்கள சமரவீர எதிர்பார்க்கிறார்.
அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும், உள்நாட்டு விசாரணை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் திடீர் முடக்க நிலையை அடையும் சாத்தியங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.
சர்வதேச விசாரணை என்பது தமிழர்களின் நீண்டநாள் வலியுறுத்தலாக இருந்து வந்தது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை, முழு அளவில் இல்லாவிடினும், ஓரளவுக்கேனும் தமக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஜனவரி 8இற்குப் பிந்திய அரசியல் சூழல் இந்த எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் அனைத்தையுமே பொடிப்பொடியாய் நொறுக்கி விடுமோ என்ற அச்சத்தை தமிழ்மக்கள் மத்தியில் இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி கிடைக்காது என்ற நிலையில் தான் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதாக உள்நாட்டில் நடத்தப்பட்ட விசாரணைகள் எதுவுமே, அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தவறியிருந்தன. அதனால் தான் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் தமக்கு நீதி கிடைக்காது என்று தமிழ்மக்கள் உறுதியாக நம்பினர்.
அதுபோலவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விசாரணை என்று மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளுமே, தமிழ்மக்களின் அந்த அவநம்பிக்கை சரியானது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. இதனால், ஐ.நா. நடத்தும் சர்வதேச விசாரணை மீது தமிழ் மக்கள் அதிகளவு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.
திடீரென அந்த செயல்முறைகள் முடக்கப்பட்டு உள்நாட்டு விசாரணைகள் மீண்டும் தொடங்கப்படுவது தமிழ்மக்களை மேலும் அவநம்பிக்கைக்கு உள்ளாக்கும் நிலையையே ஏற்படுத்தும்.
உள்நாட்டு விசாரணையாலும், சர்வதேச விசாரணையாலும் எந்தப் பயனுமில்லை என்ற கருத்து தமிழ்மக்களிடம் மேலோங்கும் நிலை உருவாகலாம்.
ஏற்கனவே புதிய உள்நாட்டு விசாரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு விசாரணைகள் குறித்து தமிழ்மக்கள் கொள்ளும் சந்தேகத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது.
உள்நாட்டு விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? அத்தகைய தண்டனைகள் எந்தளவுக்கு உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல் லப்பட்ட - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
போர்க்குற்றங்கள் தொடர்பாக அவரே பதிலளிக்க வேண்டியவர்.
இப்போது அவர் அதிகாரத்தில் இல்லாது போனாலும், இதுகுறித்து அவரிடம் எந்த விசாரணையும் நடத்தவோ, வழக்குத் தாக்கல் செய்யவோ முடியாது.
ஏனென்றால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டப்படி, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, ஓய்வுபெற்ற பின்னர் விசாரணைகளை நடத்தவோ தண்டிக்கவோ முடியாது.
இதனை அடிப்படையாக வைத்து தான், ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள், அதிகாலையில் அலரி மாளிகையில், ஆட்சியைத் தக்கவைக்கும் இராணுவச் சதித்திட்டம் குறித்து மஹிந்த ராஜபக் ஷவிடம் விசாரணை நடத்த முடியாது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியிருந்தார்.
இப்படியான நிலையில், உள்நாட்டு விசாரணையில், போருக்குப் பொறுப்பாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவிடம் எவ்வாறு விசாரணை நடத்தப்படும், அதில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் எவ்வாறு தண்டிக்கப்படுவார்? என்ற கேள்வி இருக்கிறது.
அதைவிட, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தி, குற்றவாளியாக காணப்படுவோருக்குத் தண்டனை விதிக்கலாம் என்றும், பின்னர் சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம் என்றும் யோசனை கூறியிருக்கிறார் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா.
இது மோசமானதொரு ஆலோசனை என்பதில் சந்தேகமில்லை. அதைவிட உலகத்தையும் தமிழ்மக்களையும் ஏமாற்றும் வகையிலானது.
பெயருக்கு ஒரு விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம் என்பது, நீதியை வழங்கும் முறையாக எப்படிக் கருத முடியும்.
இதுபோன்ற குறுக்குவழித் திட்டங்களின் மூலம், உள்நாட்டு விசாரணைகளை இப்போதைய அரசாங்கம் நடத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறான நீதிக்கு அப்பாற்பட்ட செயல்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு சர்வதேசம் அனுமதிக்குமேயானால், அது தமிழ்மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
இன்னும் இன்னும் குரோத மனப்பான்மையும், அவநம்பிக்கையையும், தான் ஏற்படுத்தும். அதற்குத் தான் உள்நாட்டு விசாரணை இடமளிக்கப் போகிறது என்றால், அது நிலையான அமைதிக்கான வழிமுறையாக இருக்காது.
சுபத்ரா




0 Responses to உள்நாட்டு விசாரணையை நம்ப முடியுமா? - சுபத்ரா