சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலக்கி புதிய தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணங்கியும், இணைந்தும் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபையில் இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான தீர்மானத்தை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். இதற்காக முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம்.
தமிழரின் அரசியலை முடக்க நினைக்கும் ஒரு சபையிலே, பெயருக்கு ஒரு தீர்வுத் திட்டம் என்ற நிலையில் இருந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கள் தேசிய அரசிலை ஒற்றையாட்சி முறைக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இதனை முதலமைச்சர் எவரின் அழுத்தங்களும் இன்றி எடுத்திருக்கிறார் என்பதை அவரின் உரை மூலம் உணர முடிந்தது.
எனினும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் ஒரு சந்தேகமும் உள்ளது. இன்னமும் நான்கு மாத காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இத்தகைய இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை அரசியல் நாடகம் இல்லையென நிரூபிக்க வேண்டும்.
அதுவும் எம்மைப் போன்று அவர்களுடன் கூடவே இருந்து அனுபவப்பட்டவர்களுக்கு கூறுவதாக இருந்தால் கூட்டமைப்பில் இருந்து இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் நீக்கப்பட வேண்டும். இதேபோல அவாகளின் கருத்துக்களுக்குத் தாளம் போடுபவர்களும் கூட கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவது அவசியமாகும். இந்த அப்படையில் நேர்மையாக செயற்படுகிறார்களா என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது.
இதனை புறம் தள்ளி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரிப்போம். இணைந்து செயற்படுவோம்.” என்றுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான தீர்மானத்தை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். இதற்காக முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம்.
தமிழரின் அரசியலை முடக்க நினைக்கும் ஒரு சபையிலே, பெயருக்கு ஒரு தீர்வுத் திட்டம் என்ற நிலையில் இருந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கள் தேசிய அரசிலை ஒற்றையாட்சி முறைக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இதனை முதலமைச்சர் எவரின் அழுத்தங்களும் இன்றி எடுத்திருக்கிறார் என்பதை அவரின் உரை மூலம் உணர முடிந்தது.
எனினும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் ஒரு சந்தேகமும் உள்ளது. இன்னமும் நான்கு மாத காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இத்தகைய இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை அரசியல் நாடகம் இல்லையென நிரூபிக்க வேண்டும்.
அதுவும் எம்மைப் போன்று அவர்களுடன் கூடவே இருந்து அனுபவப்பட்டவர்களுக்கு கூறுவதாக இருந்தால் கூட்டமைப்பில் இருந்து இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் நீக்கப்பட வேண்டும். இதேபோல அவாகளின் கருத்துக்களுக்குத் தாளம் போடுபவர்களும் கூட கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவது அவசியமாகும். இந்த அப்படையில் நேர்மையாக செயற்படுகிறார்களா என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது.
இதனை புறம் தள்ளி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரிப்போம். இணைந்து செயற்படுவோம்.” என்றுள்ளார்.




0 Responses to சம்பந்தன், சுமந்திரனை விலக்கினால் கூட்டமைப்போடு இணையத் தயார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்