Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாந்தோட்டையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை இணைந்துக்கொண்டு ஜனாதிபதி, கட்சியை தலைமைத்துவம் தாங்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அது அவ்வளவு சிரமமான காரியமல்ல.

ஒரு சில பிரச்சினைகளே அங்கு காணப்படுகின்றன. நாங்கள் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நான் பலதடவைகள் மனம் நோகடிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும், நாம் அதனை மறக்க வேண்டும். கடந்த காலங்களில் விட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறாதவகையில் நாம் பரஸ்பர புரிந்துணர்வுக்கு வரவேண்டும்.

எமது இந்த அரசியல் பயணத்தை நாம் உறுதியுடன் முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். எம்மிடையே பிரிவு ஏற்பட்டிருந்த போது 1977 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் எமக்கு என்ன நடந்தது என்பதனை நாம் நினைவுகூர வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்காவையும், மஹிந்தவையும் இணைத்துக் கொண்டு மைத்திரி முன்னோக்கி செல்ல வேண்டும்: சமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com