Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு வழக்கறிஞர் கே.வி.தவராசா மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ள நிலையில் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு குற்றப்புலனாய்வு துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

இந்நிலையில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு வழக்கறிஞர் கே.வி.தவராசா மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வித்தியா படுகொலைச் சம்பவத்துடன் கைதான சந்தேகநபர்கள் ஆஐர்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் கே.வி.தவராசா தலைமையிலான வழக்கறிஞர்களுடன் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியும் மன்றில் இருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விட மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாகவும் தமக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் மன்றில் கேட்டிருந்தனர்.

எனினும் வழக்கை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என கேட்ட வழக்கறிஞர் கே.வி.தவராசா குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் தாக்கத்தை செலுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் காலத்தை நீடிக்காமல் துரிதமாக குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மன்றில் கேட்டுள்ளார்.



0 Responses to வித்தியா கொலையாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்குமாறு கே.வி.தவராசா கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com