Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலையில் குற்றவாளி என்று கருதப்படும் பேரறிவாளனுக்கு இன்று மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று சிறைத் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளன் சிறு நீர்த் தொற்று நோயால் அவஸ்தைப் பட்டு வந்த பேரறிவாளன் சிகிச்சைக்கு என்று சிறைக்கு அழைத்து வரப்பட்டார். முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த வாரம் எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பேரறிவாளனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பாட்டார்.

0 Responses to பேரறிவானுக்கு இன்று மீண்டும் சிகிச்சை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com