Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று அபாயகரமான போதை கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்றவர்கள் என்பதை தேடியறிந்து கண்டுபிடித்து தருமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுமாயின், அவை தொடர்பில் தேடியறிந்து வேட்பாளர்கள் தொடர்பில் நன்னடத்தை சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கக்கூடாது என்ற யோசனையில் சகல கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இது முன்மாதிரியான செயற்பாடாகும் என்றும் வைத்தியர் திலங்க சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்ற வேட்பாளர்கள் அவசியம்; திலங்க சமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com